News May 10, 2024

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மன்னார்குடி மாணவர்

image

மன்னார்குடி தூய வளனார் மெட்ரிக் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர் எம். பிரியசரண் 497 மதிப்பெண்கள் பெற்று திருவாரூர் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தார். மேலும் இப்பள்ளி மாணவி ஜி. கிறிஸ்டினா 491 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், காவ்யா 490 பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். கணிதத்தில் 8 பேரும் அறிவியலில் 2 பேரும் சமூக அறிவியலில் 2 பேரும் சென்டம் எடுத்துள்ளனர்.

Similar News

News September 6, 2025

சட்டவிரோதமாக மது விற்ற 14 பேர் கைது

image

மீலாது நபியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மது விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக நேற்றைய தினம் மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 675 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

News September 6, 2025

வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி

image

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை சேர்ந்த நவீன் சிங்கப்பூர் செல்வதற்காக சித்தி விநாயகர் என்பவரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். நவீனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காமல் சித்தி விநாயகம் தலைமறைவானார் இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து பெங்களூரு வந்த சித்தி விநாயகத்தை பரவாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.

News September 6, 2025

திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

image

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!