News July 23, 2024

மாலையுடன் மனு அளிக்க வந்த நபர்

image

உளுந்துார்பேட்டை அடுத்த எஸ்.மலையனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் (34). நேற்று( ஜூலை 22) மனு அளிக்க மாலையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இதைப்பார்த்த டிஎஸ்பி தேவராஜ் மனு அளிக்க வந்த ராமரிடம் விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில், ‘எஸ்.மலையனுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்டதால் தன்னை ஊராட்சி மன்ற தலைவர் தாக்கியதாக புகார் அளிக்க வந்ததாக கூறினார்.

Similar News

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் சண்டையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல்!

image

திருக்கோவிலூர், அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் நேற்று (ஜூலை 10) சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது, இந்த சண்டையை தடுக்க சென்ற ரமேஷ் என்பவரையும் விஜய் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அரகண்டநல்லுார் போலீசார் விஜய் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News July 11, 2025

கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News July 11, 2025

திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

image

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!