News October 12, 2024

மாற்று பாதையில் ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே

image

கவரைப்பேட்டையில் ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காலை 10 மணிக்கு புறப்பட இருந்த சென்னை – விசாகப்பட்டினம் விரைவு ரயில், மதியம் 2.40க்கு புறப்படும். காலை 10.10க்கு புறப்பட இருந்த சென்னை – அகமதாபாத் நவஜீவன் விரைவு ரயில், மாலை 4.30க்கு புறப்படும். இரு ரயில்களும் அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் மார்க்கத்தில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே கூறியுள்ளது.

Similar News

News September 11, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் இரவு 11 மணி முதல், காலை 7 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில், ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரியின் எண்கள், மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பகிரவும்.

News September 11, 2025

திருவள்ளூர்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

image

திருவள்ளூர் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 06.10.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

News September 11, 2025

ஆவடி: மாணவனின் கையை கடித்த நடத்துநர்

image

ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் பேருந்து நிறுத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த அரசு பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதனால் மாணவர்கள் ஓடிப்போய் பேருந்தில் ஏரியுள்ளன. இதனால் மாணவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர் (ம) நடத்துனருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவனின் கையைப் பிடித்து விரலை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை

error: Content is protected !!