News September 22, 2025

மாற்றுத் திறனாளிகளிடம் நேரடியாக மனு பெற்ற ஆட்சியர்

image

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று, குறைகளை கேட்டறிந்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் உடன் இருந்தார்.

Similar News

News September 22, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.22) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 22, 2025

மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி

image

இன்று (22.09.2025) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், மாற்றுத்திறனாளி பயனாளிக்கு காதொலி கருவி வழங்கினார். இதில் மாற்றுத்திறனாளி நல அலுவலர் உடன் இருந்தனர்.

News September 22, 2025

மஹா சண்டி ஹோமத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்

image

கோவில் நகராமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகாமட்சியம்மன் கோவிலில் நவராத்திரியை ஒட்டி ஸ்ரீ சாரதா நவராத்திரி மஹா சண்டி ஹோமம் நடைபெற்று வருகிறது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார்.கோவில் நிர்வாகம் சார்பில் பிரசங்கங்கள் வழங்கப்பட்டது.

error: Content is protected !!