News August 5, 2024
மாற்றுத்திறனாளி மாணவிக்கு புத்தகம் வழங்கல்

புதுக்கோட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி சுகுணா புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் நடைபெற்று வரும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்குவதற்காக ஸ்ட்ரெச்சர் மூலம் ஒவ்வொரு புத்தக ஸ்டாலுக்கும் சென்று தனக்கு தேவையான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கினார். மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்த பலரும் மாற்றுத்திறனாளி மாணவி சுகுணாவிற்கு புத்தகங்களை பரிசாக வழங்கி பாராட்டினர்.
Similar News
News January 21, 2026
புதுக்கோட்டை: மரத்திலிருந்து விழுந்தவர் உயிரிழப்பு

புதுகை, மாத்தூர் அடுத்த தேவாலி ஜார்ஜ் தோட்டத்தில் கடந்த ஜன.4ஆம் தேதி விழுப்புரத்தை சேர்ந்த ராஜா(41) என்பவர், தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மரத்திலிருந்து கீழே விழுந்த அவர், படுகாயமடைந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது சகோதரர் அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
புதுக்கோட்டை: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News January 21, 2026
புதுகை: சிறுவன் தீக்குளித்து உயிரிழப்பு

மீமிசல் அடுத்த கொளந்திரத்தைச் சேர்ந்தவர் பிரனீத் (13). இவர் 7ம் வகுப்பு படித்து வந்த நிலையில், படிப்பின் மீது ஆர்வமின்மையால் நேற்று கொளந்திரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தீக்குளித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளார். தற்போது, இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


