News April 29, 2025
மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ஆணவக் கொலை அபாயம்

மதுரை ஹார்விபட்டி சிவசுப்ரமணியன் மனைவி முத்துஅருளி. பிறவியிலேயே இடுப்புக்குக் கீழ் கால்கள் செயல்படாத மாற்றுத்திறனாளி. நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் முத்து அருளி கூறியதாவது: கணவர் குடும்பத்தினரால் ஆணவக் கொலை ஆபத்து உள்ளது என முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுத்தேன். இதுபற்றி திருநகர் போலீசார் முறையாக விசாரிக்காமல் விசாரணையை முடிக்கும் வகையில் கையெழுத்திடும்படி கட்டாயப்படுத்துகின்றனர் என்றார்.
Similar News
News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
News April 29, 2025
மதுரை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
▶️திருமங்கலம் -04549-280361
▶️தி.குன்றம்-04182-220620
▶️உசிலம்பட்டி -04552-253510
▶️ மேலூர் -0452-2487725
▶️ சமயநல்லூர் -0452-24635360
▶️மதுரை நகர் -0452-2330031
▶️திலகர் திடல் -452-2533247
▶️தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.
News April 28, 2025
மதுரை மாநகரில் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்

மதுரை மாநகர் பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவல் ஆய்வாளர்கள் நான்கு பேர் பணியிட மாற்றம். மதிச்சியம் காவல் ஆய்வாளர் வேதவல்லி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும்,அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா, மதுரை அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கும் பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு.