News March 29, 2025
மாற்றுத்திறனாளியிடம் பண மோசடி செய்த பெண் கைது

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி அரவிந்த்சாமியிடம், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பெயரைப் பயன்படுத்தி, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்த வித்யா ராஜ் என்ற இளம்பெண், பண மோசடி செய்துள்ளார். மாற்றுத்திறனாளி அளித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை காவல்துறையினர் அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News January 23, 2026
சேலம்: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News January 23, 2026
FLASH: சேலம் மேட்டூர் வழியாக செல்ல தடை!

மாதேஸ்வரன் மலையில் சிறுத்தை தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததையடுத்து, பாதுகாப்பு கருதி மேட்டூர்-மாதேஸ்வரன் மலைப் பாதையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடைபயணத்திற்கு வனத்துறை தடை விதித்துள்ளது. பக்தர்கள் பேருந்து அல்லது கார்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News January 23, 2026
சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)


