News December 16, 2025
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க கண்காணிப்புக் குழு கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்குசாவடிகளுக்கு சென்று வாக்களிக்க செய்வது தொடர்பாக, அணுகக்கூடிய தேர்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், லோகநாயகி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 20, 2025
நீலகிரி மக்களுக்கு ஒரு நற்செய்தி!

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக மனித – விலங்கு மோதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை தடுக்கும் முயற்சியில் வனத்துறையினர் AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. நாளை முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது. இதனால் மனித விலங்கு மோதல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News December 20, 2025
நீலகிரி: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

நீலகிரி மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இதை SHARE பண்ணுங்க
News December 20, 2025
நீலகிரி: +2 போதும்.. நல்ல சம்பளத்தில் பள்ளியில் வேலை!

நீலகிரி மக்களே, மத்திய இடைநிலை கல்வி வாரியம் என்னும் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 முதல் படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.22ம் தேதிக்குள் இந்த லிங்கை <


