News August 20, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்க சிறப்பு முகாம்கள்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, ஆன்லைன் பஸ் பாஸ் வழங்கும் சிறப்பு முகாம்கள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த முகாமானது, வரும் 23ஆம் தேதி வரை (4 நாட்கள்) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள முக்தி செயற்கை அவயவங்கள் நிலையத்தில், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

Similar News

News April 6, 2026

செங்கல்பட்டு: IDBI வங்கியில் வேலை!

image

செங்கக்கல்பட்டு மாவட்ட மக்களே.., IDBI வங்கியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. விண்ணப்பிக்க ஏப்.8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் உடனே இங்கே <>கிளிக் <<>>பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News April 6, 2026

செங்கை: கூண்டோடு கட்சி தாவல்!

image

​மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அமுலு பொன்மலர், அச்சிறுபாக்கம் மத்திய ஒன்றிய பகுதிகளில் மாவட்டச் செயலாளர் சுந்தர் தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மாற்று கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் தி.மு.க.வில் இணைந்தனர். பிரச்சாரத்தின் போது பேசிய வேட்பாளர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களால் பயனடைந்த மக்கள், மீண்டும் தி.மு.க ஆட்சியை கொண்டு வர அவர் கேட்டுக்கொண்டர்.

News April 6, 2026

செங்கல்பட்டு: காருக்குள் மூச்சு பேச்சு இன்றி கிடந்த நபர்!

image

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் ஜி.எஸ்.டி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காருக்குள், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயதுரை (41) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். இவர் வாடகை கார் ஓட்டி வந்தவர். 10 ஆண்டுகளாக மனைவியைப் பிரிந்து வாழ்ந்த ஜெயதுரைக்கு மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

error: Content is protected !!