News July 7, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம்

image

தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் மாற்றத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி பொறுப்பு அமைச்சரும், தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்ஆர்கே பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மூன்று சக்கர வாகனங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி சிறப்பித்தார்.

Similar News

News November 15, 2025

தருமபுரி: டூ-வீலர் விபத்தில் இளைஞர் பலி!

image

தருமபுரி: மகேந்திரமங்கலம் அடுத்த பொம்மனுார் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் (24) அரசு போக்குவரத்து கழகத்தில் தற்காலிக நடத்துனராக பணி செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் பைக்கில் சென்றவர், முல்லாசன-ஹள்ளி அருகே எதிர்பாராமல் முள்வேலியில் மோதி விபத்துக்குள்ளானர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து பாலக்கோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 15, 2025

தருமபுரியில் 3 நாட்களுக்கு குடிநீர் நிறுத்தம்!

image

தருமபுரியில் வரும் நவ.18, 19, 20 ஆகிய தேதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என ஆட்சியர் சதீஸ் அறிவித்துள்ளார். அதன்படி, பாலக்கோடு, பாப்பாரபட்டி, காரிமங்கலம், மாரண்டஹள்ளி பேரூராட்சிகளிலும், பென்னாகரம், காரிமங்கலம், பாலக்கோடு ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட 68 பஞ்.,களிலும் ஒகேனக்கல் குடிநீர் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News November 15, 2025

தருமபுரியில் ஐடிஐ தேர்வு நடக்கும் இடங்கள்!

image

தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப ஐடிஐ லெவல் 2 தேர்வு நாளை (நவ.15) பி .பள்ளிப்பட்டி சீனிவாசா பொறியியல் கல்லூரி, பென்னாகரம் நல்லனூர் ஜெயம் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. நாளை முற்பகல் 9.30 மணி முதல் 12. 30 மணி வரை மற்றும் பிற்பகல் 2:30 மணி முதல் 5.30 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், 250 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

error: Content is protected !!