News June 11, 2024

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேருந்து பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதால் பங்கேற்று பயனடைய ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 25, 26 & 27 ஆகிய நாட்களிலும், உடலியக்க குறைபாடு, காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 28ஆம் தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

Similar News

News January 31, 2026

மதுரை மக்களே ஒரு SMS எல்லா பிரச்சனைக்கும் தீர்வு

image

மதுரை மாநகராட்சி சார்பில், தெரு விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை பிரச்சனை, சாலை சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக 78716-61787 என்ற புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைபேசி மற்றும் whatsapp வாயிலாகவோ தொடர்பு கொண்டு தங்களது குறைகளை புகார் தெரிவிக்கலாம் இதில் உடனடியாக தீர்வு அளிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.தெரியாதவர்களுக்கு SHARE செய்து உதவவும்.

News January 31, 2026

மதுரையில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த தம்பதியர்

image

மதுரை எச் எம் எஸ் காலனி அருணாச்சலேஸ்வரர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.இவரது மனைவி இசக்கி நாச்சியார். தம்பதியர் இருவரும் மாதாந்திர ஏலச்சீட்டு மோசடி செய்ததாக மதுரை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முதலீட்டாளர் நல சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 1.06 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது

News January 31, 2026

மதுரை: வேலை கிடைக்காததால் கொத்தனார் தற்கொலை

image

மதுரை ஜெய்ஹிந்த்பு­ரத்தை சேர்ந்­த­வர் முத்துக்குமார்(29). சென்­னையில் கொத்­த­னார் வேலை பார்த்து வந்த நிலை­யில் அங்கு நிரந்­த­ர­மாக வேலை கிடைக்­கா­மல் மதுரைக்கு திரும்பி வந்­தார். இங்கும் சரியாக வேலை கிடைக்­க­வில்லை. இதனால் மன வருத்­தத்தில் இருந்து வந்த முத்துக்குமார் இன்று
வீட்­டில் தூக்கு போட்டு தற்­கொலை செய்து கொண்­டார். ஜெய்ஹிந்த்பு­ரம் போலீ­சார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!