News March 27, 2025

மாற்றுத்திறனாளிகளின் சலுகை பேருந்து பயண அட்டை காலம் நீட்டிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 9, 2025

வேலூர்: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து நவ.26ம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 9, 2025

வேலூர்: போலி சான்றிதழ் அளித்து அரசு வேலை – 3 ஆண்டுகள் சிறை

image

ராணிப்பேட்டை சேர்ந்த விஜி (41). இவர் கடந்த 2012-ம் ஆண்டு வேலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். இவரின் சான்றிதழ்கள் 2015-ம் ஆண்டு சரிபார்த்த போது, போலி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந்தது தெரிய வந்தது. இந்த வழக்கின் விசாரணை வேலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ரஞ்சிதா நேற்று (நவ.8) விஜிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்.

News November 9, 2025

வேலூர்: லாரியில் மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி!

image

வேலூர்: அணைக்கட்டு தெள்ளை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் நேற்று (நவ.8) லாரியின் கேபின் பகுதியில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். அப்போது கணியம்பாடி அருகே சென்ற போது உயர் அழுத்த மின்சார கம்பி உரசி சம்பவ இடத்திலேயே மணிகண்டன் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தாலுகா போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!