News March 27, 2025
மாற்றுத்திறனாளிகளின் சலுகை பேருந்து பயண அட்டை காலம் நீட்டிப்பு

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வரும் இலவச பேருந்து பயண சலுகை அட்டையின் செல்லத்தக்க காலம் வருகிற மார்ச் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த பயண சலுகை அட்டையை மே 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாற்றுத்திறனாளிகள், பயணிகள் தொடர்ந்து பயணம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (மார்ச் 27) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2025
வேலூர்: முன் ஜென்ம பாவங்கள் நீங்க செல்ல வேண்டிய கோவில்

வேலூர் விண்ணம்பள்ளி பழமையான அகத்தீஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் மீது சூரியஒளி விழும் நிகழ்வு பங்குனி மாதம் 23ம் தேதி முதல் சித்திரை 1 வரை நடைபெறும். இந்த ஆண்டும் வரும் ஏப். 14-ஆம் தேதி வரை இந்நிகழ்வு நடைபெற உள்ளது. சிவனை சூரியன் வழிபடும் காட்சியை கண்டால் முன்ஜெனம பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. அதனாலேயே ஏராளமான பகதர்கள் வருகை தந்து வழிபட்டு செல்கின்றனர். ஷேர் பண்ணுங்க
News April 6, 2025
வேலூரில் தமிழில் பெயர் வைக்க ஆட்சியர் உத்தரவு

வேலூர்ஆட்சியர் அறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், “மாவட்டத்தில் உள்ள கடைகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள் மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் வருகிற மே 15-ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்; தமிழ், ஆங்கிலம் மற்றும் தேவைபட்டால் பிற மொழிகளிலும் எழுதி கொள்ளாலாம்” என குறிப்பிட்டுள்ளார். *உங்களுக்கு தெரிந்த கடை வைத்திருப்போர்& தமிழ் ஆர்வலர்களுக்கு பகிரவும்*
News April 6, 2025
9 இடங்களில் மாடு விடும் விழா நடத்த அனுமதி

வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் 9 இடங்களில் மாடுவிடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 7ஆம் தேதி பள்ளிகொண்டா, 11ஆம் தேதி காட்பாடி, செதுவாலை, 12ஆம் தேதி வடுகன்தாங்கல், 16ஆம் தேதி ராமாபுரம், 17ஆம் தேதி காட்பாடி, 19ஆம் தேதி அக்ராவரம் 19ஆம் தேதி மோட்டூர், மே 2ஆம் தேதி கழிஞ்சூர் ஆகிய இடங்களில் மாடுவிடும் விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.