News October 12, 2025
மார்த்தாண்டம்: அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

மார்த்தாண்டம் ரெயில்வே நிலையம் அருகில் வசிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கிருஷ்ணதாஸ்(73) வீட்டின் கீழ் தளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நேற்று காலை மாடிக்கு சென்றபோது அறைக்கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் நெக்லஸ் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய நபரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 7, 2026
குமரி: வீட்டின் முன் மர்மமாக இறந்து கிடந்த பெண்!

சூழால் பகுதியைச் சேர்ந்தவர் முத்தம்மாள் (53). இவர் வீட்டின் முன்பு முகத்தில் காயத்துடன் அசைவற்ற நிலையில் கிடந்தார். மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொல்லங்கோடு போலீசார் அவரது உடலை கைப்பற்றி நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது அவர் சாவுக்கு என்ன காரணம் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.
News March 7, 2026
குமரியில் மேலும் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்!

சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். ஏற்கனவே, 21 சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் குமரி மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 6 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை எஸ்.பி ஸ்டாலின் பிறப்பித்துள்ளார்.
News March 6, 2026
குமரி: நிலம் வாங்கும் போது இத CHECK பண்ணுங்க.!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ராமநாதபுரம் மக்களுக்கு இனி அந்த கவலை இல்லை. நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய<


