News March 21, 2024

மார்ச் 25ஆம் தேதி ஓபிடி இயங்காது – ஜிப்மர்

image

புதுச்சேரி ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய அரசின் விடுமுறை தினமான 25ஆம் தேதி திங்கட்கிழமை ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு (ஓபிடி ) இயங்காது. எனவே அன்றைய தினம் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை நோயாளிகள் தவிர்க்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

Similar News

News September 4, 2025

புதுச்சேரி: முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு

image

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வடக்கு தெற்கு பகுதிகளில், தூண்டில் முன் வளைவு அமைக்க வலியுறுத்தி திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தா. சரவணன் மீனவர்களுடன் சென்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் நேரில் சந்தித்து மனு அளித்தார். இதை பரிசினை செய்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.

News September 3, 2025

புதுவை ஜிப்பர் நிர்வாகம் சார்பில் முக்கிய அறிவிப்பு!

image

புதுவை, மத்திய அரசு விடுமுறை தினமான 05.09.2025 (வெள்ளிக்கிழமை) அன்று மிலாடி நபியை (முஹம்மது நபியின் பிறந்தநாள்) முன்னிட்டு புதுச்சேரி மாநில ஜிப்மர் வெளிப்புற நோயாளி பிரிவுகள் இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க..!

News September 3, 2025

புதுச்சேரியில் மது கடைகள் மூட உத்தரவு!

image

புதுச்சேரியில் வரும் 05.09.2025 (வெள்ளிகிழமை) அன்று மீலாது நபி தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, கலால் துறை ஆணையர் ஆணைப்படி புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், அன்றைய தினத்தில் எல்லா கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE பண்ணுங்க.

error: Content is protected !!