News March 14, 2026
மார்ச் 16-ல் அதிமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அதிமுக கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு, மார்ச் 16-ல் அதிகாரப்பூர்வமாக தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் நிலையில், இதுவரை தொகுதி உடன்பாடு முடிவாகவில்லை. சீட் பேரத்தில் இழுபறி நீடிப்பதாலேயே பேச்சுவார்த்தை தொடங்கவில்லை என்றும், பாஜகவுக்கு EPS பிடி கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Similar News
News April 1, 2026
தேர்தல் பொறுப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் விலகல்

காங்., தேர்தல் மேலாண்மை ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பதவியிலிருந்து MP மாணிக்கம் தாகூர் விலகியுள்ளார். காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு தாமதமாகும் நிலையில் இந்த விலகல் உள்கட்சியில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கெனவே, திமுக உடனான கூட்டணியை உறுதி செய்வதற்கு முன்புவரை தவெக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டிலான மாணிக்கம் தாகூரின் கருத்துகள் கவனம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
News April 1, 2026
439 பெண்களுக்கு தந்தையான மாமனிதர்!

இது வினோத செய்தி அல்ல, வியந்து பாராட்ட வேண்டிய செய்தி. குஜராத்தை சேர்ந்த மகேஷ் சவானி என்ற வைர வியாபாரி 439 இளம் பெண்களுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். 2008-ம் ஆண்டு மரணமடைந்த தன் ஊழியரின் மகளுக்காக முதல்முறை திருமணம் செய்து வைத்தவர், அதை இன்றும் தொடருகிறார். சாதாரணமாக திருமணத்தை முடிக்காமல், மணப்பெண்ணுக்கு தங்க நகைகள் போட்டு, பெண் வீட்டு சீர்வரிசையும் கொடுத்து வருகிறார்.
News April 1, 2026
பாஜகவிடம் டிமாண்ட் வைக்கிறாரா அண்ணாமலை?

தேர்தலில் அண்ணாமலை போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் தெற்கு அல்லது மொடக்குறிச்சியில் போட்டியிட முடியுமா என அவரிடம் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறாராம். ஆனால் கோவைக்கு உட்பட்ட ஏதேனும் ஒரு சட்டமன்ற தொகுதியை ஒதுக்கினால் போட்டியிடுவது குறித்து பரிசீலிக்கிறேன் என அண்ணாமலை சொன்னதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


