News January 5, 2025

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

அண்ணா பிறந்த நாளையொட்டி இன்று ( ஜனவரி 5 ) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  பள்ளி கல்லூரி மாணவர்கள் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்  எம்.பி மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News

News September 23, 2025

தருமபுரியில் புத்தகத் திருவிழா

image

தருமபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5 வரை மதுராபாய் சுந்தர ராஜாராவ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவில், பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம், பட்டிமன்றம், நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்க உள்ளன.

News September 23, 2025

தருமபுரி: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

தருமபுரியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News September 23, 2025

தருமபுரி: புதிய வாகனம் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3 சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் இந்த <>லிங்கில் <<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!