News February 4, 2026
மாரடைப்பை 3 ஆண்டுகளுக்கு முன்பே அறியலாம்

மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகள் முன்பே கணிக்கும் வழிமுறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மாரடைப்பு தாக்கிய 2.5 லட்சம் நோயாளிகளின் ரத்தத்தை சோதித்ததில், சி-ரியாக்டிவ் புரதம் & ட்ரோபோனின்(இதயம் பாதிக்கப்படும் போது வெளியேறும் புரதம்) அதிக அளவில் இருப்பதை கண்டறிந்தனர். இவற்றை கண்காணிப்பதன் மூலம், முன்கூட்டியே மாரடைப்பு ஆபத்தை கணிப்பதுடன், தகுந்த சிகிச்சை மூலம் அதை தடுக்கவும் முடியும் என்கின்றனர்.
Similar News
News February 12, 2026
புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

தென்கிழக்கு வங்கக் கடலில் பிப்.15-ல் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இதனால் இன்று தென்தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியில் செல்வோர் மறக்காமல் குடையை எடுத்துச் செல்லுங்கள்.
News February 12, 2026
இனி ஆதாரில் வீட்டு அட்ரஸை ஈசியா மாத்தலாம்!

ஆதார் கார்டில் வீட்டு அட்ரஸை மாற்ற இனி கஷ்டப்பட வேண்டிய அவசியமில்லை. <
News February 12, 2026
பிணையம் இல்லாமல் ₹20 கோடி கடன் கிடைக்கும்

Startup-களுக்கு ₹20 கோடி வரை பிணையில்லா கடன்களை பெற Credit Guarantee Scheme for Startups திட்டம் உதவுகிறது. வாங்கிய கடனை நீங்கள் திருப்பி செலுத்த தவறும் பட்சத்தில் 75-85% அரசே ஈடுகட்டும் என உத்தரவாதம் வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் ஸ்டார்ட் அப் DPIIT அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். நிறுவனம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்க கூடாது. அப்ளை பண்ண இங்கே <


