News February 25, 2025
மாரடைப்பால் வட்டாட்சியர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வட்டாட்சியராக பணியாற்றி வந்த பிரபாகரன் என்பவர் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் குடிமைப் பொருள் வட்டாட்சியர் பணியாற்றி வந்த நிலையில் மாரடைப்பால் நேற்று உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2026
கள்ளக்குறிச்சி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சியில் நிலவி வரும் வெப்பத் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், கண்டிப்பாகத் தொப்பி அணிந்தோ அல்லது குடை பிடித்தோ செல்ல வேண்டும் எனவும், குடிநீர் பாட்டில்களை உடன் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தியுள்ளார்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

ராயப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி சாலை பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், வயிற்று வலி அதிகமானதால் கடந்த 23-ம் தேதி மதுவில் களைக்கொல்லி மருந்தை கலந்து குடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் நேற்று வழக்குபதிந்தனர்.
News March 10, 2026
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (9.3.2026) இரவு முதல் இன்று (10.3.2026) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


