News April 4, 2026
மாயவரம்: ரூ.82.500 பறிமுதல் செய்த பறக்கும் படை

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் வழுதலைக்குடி பிரதான சாலையில் தனி தாசில்தார் பாலமுருகன் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பைக்கில் சோதை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உரிய ஆவனமின்றி ரூ.82,500 வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையெடுத்து அதனை பறிமுதல் செய்து சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News April 4, 2026
மாயவரம்: MLA தலைமையில் ஐக்கியம்!

பூம்புகார் தொகுதி செம்பனார்கோவிலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக மாவட்ட செயலாளர் MLA நிவேதா எம் முருகன் உள்ளிட்ட கூட்டணி கட்சி மூத்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மேலபெரும்பள்ளம் வைகல் கோனேரிராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10கும் மேற்பட்டோர் அதிமுகவில் இருந்து விலகி, MLA தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
News April 4, 2026
மாயவரம்: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், கோடை விடுமுறையில் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் ஆறு, குளம், குட்டை, ஏரி, கிணறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பதாக்லும் விளயாடுவதாலும் சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால் நீர்நிலைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் மிகுந்த கவனமுடன் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
News April 3, 2026
மாயவரம்: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

மாயவரம் மக்களே, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் கையெழுத்திட்ட 60 நாட்களுக்குள் கட்டாயம் ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். இதை செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இதுபோல வீட்டின் உரிமையாளர்கள் 2 மாத வாடகைக்கு மேல் அட்வான்ஸ் தொகை பெறக்கூடாது. ஷேர் பண்ணுங்க!


