News November 16, 2024
மாயனூர் கதவணைக்கு இன்று 5,729 கன அடி நீர்வரத்து

கரூர், மாயனூர் கதவணைக்கு இன்று காலை நிலவரப்படி 5729 கன அடி நீர் காவிரியில் வந்து கொண்டிருக்கிறது. காவிரி ஆற்றில் 4509 கன அடி நீரும், தென்கரை பாசன வாய்க்காலில் 500 கன அடி, கட்டளை மேட்டு வாய்க்காலில் 300 கன அடி, புதிய கட்டளை மேட்டு வாய்க்காலில் 400 கன அடி நீரும் பாசனத்திற்காக திறந்து விடப்படுகிறது. அணைக்கு சில நாட்களாகவே 2000 கன அடி நீர் குறைவாக வருகிறது.
Similar News
News November 10, 2025
கரூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 18,000க்கும் மேற்பட்டோர் பயன்!

கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 ஆம் தேதி முதல் 01.11.2025 ஆம் தேதி வரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஆண்கள் 6,911 பேர், பெண்கள் 11,149 பேர் என மொத்தம் 18,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்தச் சுகாதாரத் திட்டம் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
News November 10, 2025
கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
News November 10, 2025
கரூர்: புலனாய்வு துறையில் வேலை! APPLY NOW

மத்திய அரசு புலனாய்வுத்துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவி மத்திய புலனாய்வு அதிகாரி பதவியில் 258 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு கல்வித்தகுதி BE, ME போதும். ஊதியம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரை வழங்கப்படும். இதற்கான அறிவிப்பை <


