News March 4, 2025
மாமியாரை கட்டையால் தாக்கிய மருமகன்

கிருஷ்ணகிரியை சேர்ந்த சாந்தி-பூங்காவனம் தம்பதிக்கு இடையே 3 நாட்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் கோபித்துக் கொண்ட சாந்தி, தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரை அழைத்து வர அங்கு குடிபோதையில் சென்ற பூங்காவனம், வீட்டில் இருந்த மாமியாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விறகு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் பூங்காவனத்தை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News August 15, 2025
‘மக்களே உஷாரா இருங்கள்’ – கிருஷ்ணகிரி போலீஸ்

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை முக்கிய விழிப்புணர்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதில், வங்கியில் இருந்து ஒருபோதும் ஏடிஎம் கார்டு எண், OTP மற்றும் PIN-களை அலைப்பேசி மூலம் கேட்டு வாங்க மாட்டனர். அவ்வாறு அழைப்பு வந்தால் நம்பி ஏமாற வேண்டாம். மேலும், இதுகுறித்து 1930 என்ற எண்ணில் புகாரளிக்கலாம் என தெரிவித்துள்ளனர். இதுபோன்ற மோசடிகள் தற்போது அதிகரித்துள்ளனர. எனவே நண்பர்களுக்கும் பகிர்ந்து எச்சரியுங்கள்.
News August 15, 2025
கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா விருது வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றினார். தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பணிகளில் சிறந்து விளங்கும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும் சான்றிதழ் மற்றும் விருதுகளை வழங்கினார். இதில் ஏராளமான அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
கிருஷ்ணகிரி: இலவசமாக 2 GB டேட்டா, அன்லிமிட்டட் CALL, 100 SMS

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாட்டங்களில் BSNL 4G சேவை 341 கோபுரங்கள் மூலம் வழங்கப்படுகிறது. கூடுதலாக 50 கோபுரங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும், ரூ.1-க்கு ஒரு மாத 4G சேவை வழங்கும் திட்டத்தின்கீழ் இலவசமாக சிம்கார்டு வழங்கப்படுகின்றன. இதில், 2 GB ஸ்பீடு டேட்டா, 100 SMS/DAY, அன்லிமிட்டட் கால் வசதிகள் உள்ளன. இது வரும் 31 ஆம் தேதி வரை உள்ளது என தர்மபுரி மண்டல BSNL துணை மேலாளர் தெரிவித்துள்ளார். SHARE IT