News November 16, 2024

மாமல்லபுரம் கடலில் குளித்த 2 பேர் மாயம்

image

அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த கிரீஷ்(20) மற்றும் ரியாஸ்(18), வீட்டில் மெரினா பீச்சுக்கு செல்வதாக கூறிவிட்டு, நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, 5 பேரும் கடலில் குளித்தபோது, கிரிஷ் மற்றும் ரியாஸ் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டனர். இருவரையும் மாமல்லபுரம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீனவர்கள் உதவுயுடன் தேடி வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

சென்னையில் ‘சைலண்ட்’ ஆக வேலை செய்யும் சீமான்

image

நாம் தமிழர் கட்சி இந்த முறை சென்னையில் உள்ள மீனவப் பகுதிகள் மற்றும் குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. “கடலோரத் தொகுதி”களில் தங்கள் வாக்குகளை அதிகரிக்க அவர்கள் எடுத்து வரும் மௌனப் புரட்சி, பெரிய கட்சிகளுக்குச் சவாலாக அமையலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சீமானின் இந்த முயற்சி கைகொடுக்குமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News March 2, 2026

சென்னை: தண்ணீரில் தலையை முக்கி கொலை!

image

கொளத்தூரை சேர்ந்த பிரதீப்(35)- லியா(28) தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் லியா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது 2 மகள்களுடன் மாமல்லபுரம் சென்ற பிரதீப் விடுதியில் 2 மகள்களை தண்ணீரில் தலையை முக்கி கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.சிகிச்சையில் இருந்து குணமானதால் அவர் கைது செய்யப்பட்டார்.

News March 2, 2026

சென்னையில் கொடூரத்தின் உச்சம்

image

அயனாவரத்தைச் சேர்ந்த 7வயது சிறுமி கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது விஜய்(35) என்பவர் வலுக்கட்டாயமாக அந்த சிறுமியை தன் வீட்டிற்குள் அடைத்து, பாலியல் சீண்டலில் ஈடுபட்டு துன்புறுத்தியுள்ளார். சிறுமி அலறலை கேட்டு வந்த அவரது தாய், மகளை மீட்டு, சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அயனாவரம் மகளிர் போலீசார் விசாரித்து, விஜயை, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

error: Content is protected !!