News April 6, 2024
மாமனார் தாக்கியதில் மருமகன் பலி

தூத்துக்குடி மாவட்டம் எத்திலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் நேற்று முன்தினம் தனது மனைவியை பார்ப்பதற்காக கயத்தாறு அருக வடக்கு சுப்பிரமணியபுரத்திற்கு சென்ற போது அவரது மாமனார் குருசாமி உட்பட 3 பேர் இவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கயத்தாறு போலீஸார் குருசாமி உட்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 10, 2026
தூத்துக்குடியில் இரவு ரோந்து போலீசார் பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு ரோந்து காவல் அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று இரவு ரோந்து காவல் அதிகாரியாக விளாத்திகுளம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அசோகன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் உள்ள அதிகாரிகள் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அவசர தேவைக்கு இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்படுகிறது.
News February 9, 2026
BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி 27ம் தேதியும், பச்சை சாத்தி 28ம் தேதியும், திருத்தேர் மார்ச் 2ம் தேதியும், தெப்ப தேர் மார்ச் 3ம் தேதியும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News February 9, 2026
தூத்துக்குடி: கேஸ் மானியம் ரூ.300 வேண்டுமா?

தூத்துக்குடி மாவட்ட மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


