News March 28, 2024

மான் இருசக்கர வாகனத்தில் மோதியதில் ஒருவர் காயம்

image

தென்கரை கோட்டை அடுத்த ராமியம்பட்டி திரௌபதி அம்மன் கோயில் அருகே தருமபுரி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது மான் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Similar News

News October 29, 2025

தருமபுரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

image

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.

News October 29, 2025

தருமபுரி: வாரச்சந்தை வியாபாரிகள் கொண்டாட்டம்

image

தருமபுரி மாவட்டம்,நல்லம்பள்ளியில் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடப்பது வழக்கம். இதில், கிருஷ்ணகிரி, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, வியாபாரிகள் ஆடுகளை வாங்க, விற்க வந்திருந்தனர். இதனையொட்டி நேற்று (அக்.28) ஆட்டு சந்தையில், 600-ம் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் ஆடுகள் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை மொத்தமாக, 1 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

News October 29, 2025

தருமபுரி: ஒகேனக்கலில் குளிக்க அனுமதி

image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து சரிவு. நேற்று (அக்.28) மதியம் 2 மணி நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 9,500 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 16,000 கன அடியாக இருந்தது. தண்ணீர் வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!