News December 29, 2024
மாநில அளவிலான போட்டியில் சீர்காழி ஆசிரியர் சாதனை

ஈரோட்டில் 39ஆவது மாநில மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சீர்காழி சபாநாயகர் முதலியார் பள்ளி முதுகலை கணித ஆசிரியர் பத்ரிநாராயணன் 5 கி.மீ. நடை போட்டியில் பங்கேற்று, மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். பதக்கம் வென்ற ஆசிரியருக்கு சக ஆசிரியர்கள் மற்றும் சீர்காழி பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
மயிலாடுதுறை: தேவையற்ற PHONE CALLS வருதா ?

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 11, 2026
மயிலாடுதுறை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20 – 25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 11, 2026
காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கிய காவல் உயர் அதிகாரி

மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மகேஸ்வர் தயாள் நேற்று வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணிபுரியும் காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி ஸ்டாலின் உடன் பங்கேற்றார்.


