News January 18, 2025

மாநகர காவல் ஆணையாளரின் அறிவிப்பு 

image

சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை ஜனவரி 18 தேதியிலிருந்து பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு வரை சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள், சங்கங்கள், பொதுக்கூட்டம், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த, 5 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பின்பு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது என்றும் தெரிவித்துள்ளார். 

Similar News

News September 9, 2025

சேலம் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News September 9, 2025

சேலம் மக்களே Wi-Fi பயன்படுத்தும் போது எச்சரிக்கை!

image

சேலம் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்
பொது இடங்களில் உள்ள இலவச Wi-Fi பயன்படுத்தும்போது எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் பாதுகாப்புக்காக அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், மோசடி புகார்களுக்கு 1930 என்ற என்னை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

News September 9, 2025

வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!

image

நவராத்திரி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக சேலம் வழியாக இயக்கப்படும் மதுரை-பெங்களூரூ கண்டோன்மென்ட்-மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பெட்டிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது, தற்போது 8 பெட்டிகள் கொண்டிருந்த நிலையில் 16 பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் செப்.11- ல் அமலுக்கு வரும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!