News April 20, 2024
மாநகர காவலர்களின் மனிதநேய செயல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நேற்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பணியில் நெல்லை மாநகர காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வாக்களிக்க வருகை தந்த மூதாட்டி ஒருவருக்கு மாநகர காவல் துறையினர் நீர், மோர் வழங்கி உபசரித்தனர். இந்த புகைப்படமானது இன்று (ஏப்.20) நெல்லையில் வைரலாகி வருகிறது.
Similar News
News November 10, 2025
நெல்லை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

நெல்லை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
நெல்லை: 500 கிலோ வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கல்

நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் ஆளில்லாத வீட்டில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் அந்த ஆளில்லாத வீட்டிற்கு அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு மூட்டை மூட்டையாக 500 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.இதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 10, 2025
நெல்லையில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி

தமிழ்நாடு அரசின் “வெற்றி நிச்சயம்” திட்டத்தின் கீழ், ஐஸ்வர்யா ஸ்ரீ கல்வி நிறுவனம், திருநெல்வேலியில் இலவச தையல் மற்றும் ஆரி ஒர்க் பயிற்சி வழங்குகிறது. மூன்று மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சியில் 30 நபர்களுக்கு மட்டும் சேர்க்கை வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில் மொத்தம் ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க நவ. 11 இறுதி நாள். விபரங்களுக்கு 90250 79679 தொடர்பு கொள்ளவும்.


