News November 21, 2024

மாநகராட்சி பெண் பணியாளர்கள் 42 பேருக்கு மார்பக புற்றுநோய்!

image

நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் 834 பெண் பணியாளர்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை நடத்தப்பட்டது. மொத்தம் 30 நாள் நடந்த பரிசோதனையில், 42 பேருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிந்தது. இது 4.5% ஆகும். நோய் பாதித்தவர்களுக்கு ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சிறப்பு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் மகேஷ் நேற்று(நவ.,20) கூறியுள்ளார்.

Similar News

News August 7, 2025

குமரி மாவட்ட இரவு ரோந்து பணி

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (ஆக.07) இரவு நேரத்தில் பாதுகாப்பு பணிக்காக ரோந்து பணியில் இருக்கும் காவல் துறை அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காவல் நிலைய வாரியாக SSI மற்றும் HC அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு எண்ணுடன் முழு விவரங்கள் தரப்பட்டுள்ளன.

News August 7, 2025

குமரி: பத்து நாளில் 10 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை

image

குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கின்கால் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க மதிப்பூதிய அடிப்படையில் ஒரு பெண் ஆற்றுப்படுத்துநர் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.(10 நாட்கள் மட்டும்). இந்த <>லிங்கை<<>> கிளிக் செய்து நாளை (ஆக.08) மாலைக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.தொடர்புக்கு-04562-277014.

News August 7, 2025

இடைநிலை துணை தேர்வு சான்றிதழ் பெற அறிவுறுத்தல்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தியில்;2021 இடைநிலை துணைத்தேர்வு மற்றும் மே.2022 பொதுத்தேர்வு / ஆக.2022 இடைநிலை துணைத் தேர்வு வரையிலான அனைத்து பருவங்களுக்குரிய தனித் தேர்வர்களால் கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 90 நாட்களுக்குள் தேர்வு எழுதிய நுழைவுச் சீட்டுடன் நாகர்கோவில் முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

error: Content is protected !!