News April 22, 2025

மாநகராட்சி ஒப்பந்த புள்ளியில் முறையீடு என பாஜக புகார்

image

தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு ஏப்.4 அன்று ஒப்பந்த புள்ளிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இறுதி ஏப்.25 என அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்த தேதி திறக்கப்படுவதற்கு முன்பே மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இதில் முறைகேடுகள் நடத்து உள்ளதாக பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்ராங்கதன் இன்று மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

Similar News

News April 23, 2025

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு பயிற்சி – இளம்பகவத்

image

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு எழுத தயாராகும் தூத்துக்குடி மாவட்ட போட்டித் தேர்வு ஆர்வலர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் கோரம்பள்ளத்தில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்கப்பட உள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 23, 2025

தூத்துக்குடி இரவு ரோந்து போலீஸ் விவரம்

image

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெற்று விடாமல் தடுக்கும் வகையில் மாவட்ட முழுவதும் காவல்துறையினர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இரவு மாவட்ட முழுவதும் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விபரங்களை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

News April 23, 2025

தூத்துக்குடியில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம்

image

தூத்துக்குடியில் மாவட்ட விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கோட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 24ஆம் தேதி தூத்துக்குடி கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!