News September 9, 2025
மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 3 வார்டு 34-ல் உள்ள சிட்லபாக்கம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள சமையல் கூடத்தில் முதல்வரின் காலை உணவு திட்டம் முறையாக செயல்படுகிறதா என தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீதா பாலச்சந்தர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது உணவு குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். உடன் அலுவலர்கள் இருந்தனர்.
Similar News
News September 9, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்ப்ட்டு மாவட்டத்தில் இன்று (செப்-09) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 9, 2025
JUST IN: செங்கல்பட்டு- ஓடும் பேருந்தில் பயணிகள் கதறல்

செங்கல்பட்டு அருகே அரசு பேருந்தின் டயர் கழன்று ஓடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செங்கப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தின் டயர் தனியாக கழன்று தாறுமாறாக ஓடியதால் பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
News September 9, 2025
மறைமலை நகரில் உயிர் நண்பன் மீது கொலை வெறி தாக்குதல்

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில், மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தீர்த்தகிரி என்ற இளைஞர் தனது உயிர் நண்பரான தயாநிதியை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த தயாநிதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தையடுத்து போலீசார் தீர்த்தகிரியை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.