News September 16, 2024
மாநகரப் பேருந்து கவிழ்ந்து ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

செங்குன்றத்தில் இருந்து தாம்பரத்திற்கு ‘104’ என்ற எண் கொண்ட மாநகரப் பேருந்து இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மதுரவாயல் அருகே மாநகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து சர்வீஸ் சாலையில் சென்ற ஆட்டோ மீது விழுந்தது. இதில், ஆட்டோ ஓட்டுநர் தினேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பேருந்தில் சென்ற 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
Similar News
News September 15, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (15.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
News September 15, 2025
சென்னையில் விஜய் பிரசாரத்திற்கு தவெக மனு

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 25 வரை சென்னை முழுவதும் தங்களது கட்சியின் சார்பில் பிரசாரம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தவெக கட்சி சார்பில் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் மக்களுக்கான செயல்திட்டங்களை விளக்கும் வகையில் பொதுக்கூட்டங்கள், பிரச்சார வாகனங்கள், துண்டுப்பிரசுரங்கள் மூலமாக பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
News September 15, 2025
சென்னையில் கூடுதலாக பருவ மழை; வானிலை ஆய்வு மையம்

சென்னையில் வழக்கத்தை விட கூடுதலாக பருவ மழை பெய்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 18% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று வரை 3% குறைவாகவும் பெய்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.