News January 28, 2026
மாதம் ₹2,000.. தமிழக அரசு அறிவிப்பு

‘அன்புக்கரங்கள்’ திட்டம் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதந்தோறும் தமிழக அரசு ₹2,000 வழங்குகிறது. 18 வயது நிறைவடையும் வரை இந்தத் தொகை வழங்கப்படுவதோடு, உயர்கல்விக்கும் அரசு உதவி செய்யும். பெற்றோர் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் நோய்களுடன் வாழ்ந்தாலோ (அ) மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலோ கூட இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு உடனடியாக தாலுகா ஆபீஸை அணுகுங்கள். SHARE IT.
Similar News
News February 5, 2026
ராகுல்காந்தியின் ஆடையை விமர்சிக்கும் பாஜக

காதி மற்றும் சுதேசி உடைகளின் மீது மரியாதை இல்லாதபோது, ராகுல் காந்திக்கு பார்லிமெண்ட் மீது எப்படி மரியாதை இருக்கும் என பாஜக MP நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார். டெல்லியில் பேசிய அவர், இந்திரா காந்தி போன்ற காங்., தலைவர்கள் சேலை அணிந்தனர், ஆண்கள் குர்தா அணிந்தனர். ஆனால், ராகுல் காந்தி மட்டும் கிழிந்த, கந்தலான பேண்ட், சட்டை அணிவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அவரது கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீங்க?
News February 5, 2026
போன்/ கம்ப்யூட்டர் பார்த்து கண் எரிச்சலா? தவிர்க்க 7 டிப்ஸ்!

கணினி மயமாகிவிட்ட உலகில், கம்ப்யூட்டர், போனை பார்த்தபடியே தான் பலரும் வாழ்கிறோம். இதனால், கண் எரிச்சல் ஏற்பட்டு பலரும் அவதிப்படுகிறார்கள். அப்படி அவதிப்படுபவர்களில் ஒருவர் தான் நீங்கள் என்றால் உங்களுக்காக சில டிப்ஸை கொண்டு வந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை இடது பக்கமாக Swipe செய்து அந்த டிப்ஸ்களை தெரிஞ்சிக்கோங்க. அப்படியே உங்களுக்கு தெரிஞ்ச சில டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News February 5, 2026
மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன் காலமானார்

மூத்த தமிழறிஞர் வ.ஜெயதேவன்(79) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழ் அகராதி தொடர்பாக பல ஆய்வுக் கட்டுரைகள், நூல்களை எழுதியுள்ள இவருக்கு, 2013-ல் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது வழங்கி TN அரசு கௌரவித்தது. சென்னை பல்கலை.,யின் தமிழ் HOD பொறுப்பு வகித்த ஜெயதேவன், மத்திய, மாநில அரசுகள் அமைத்த பல கல்வி குழுக்களுக்கு தலைவராகவும் இருந்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பெருங்குடியில் இன்று நடைபெற்றது.


