News December 5, 2025

மாதம்பட்டியில் ஒரு தலை காதலால் மாணவர் தற்கொலை!

image

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். அரசு பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் கீர்த்தி வாசன்(17). இவர் தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில் பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்துள்ளார். இந்நிலையில் கடந்த 28ஆம் தேதி வீட்டில் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். கோவை ஜிஎச்சில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார். பேரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News April 7, 2026

கோவை: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

image

கோவை மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ( நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க)

News April 7, 2026

கோவை: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

கோவை மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1. விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News April 7, 2026

மேட்டுப்பாளையம் அருகே விபத்து: ஒருவர் பலி

image

மேட்டுப்பாளையம் அருகே தண்டவாள விரிவாக்கப் பணியின்போது ஜேசிபி மோதியதில் ராமகிருஷ்ணன் (45) என்பவர் உயிரிழந்தார். மதுபோதையில் இருந்த அவர், நேற்று இரவு காட்டூர் ரயில்வே தண்டவாளம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பணியில் இருந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!