News February 17, 2025

மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகை வழங்கிய கலெக்டர்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று(பிப்.17) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட மைய நூலகத்தின் சார்பில் சிறுவாணி இலக்கியத் திருவிழா-2025 போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சதீஸ் வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News September 16, 2025

தருமபுரி: டிகிரி இருந்தால் போதும்! ரயில்வேயில் வேலை

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

தருமபுரியில் ஊக்கத்தொகையுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி

image

தருமபுரியில் பதிவுபெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு செப்.18 முதல் கடகத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 7 நாட்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் பங்கேற்போருக்கு சான்றிதழ், இலவச உணவுடன், ரூ.5,600 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க!

News September 16, 2025

தர்மபுரி: உணவு பாதுகாப்புத் துறை திடீர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையில், ஒட்டப்பட்டி, தொழில் மையம் மற்றும் அதியமான் கோட்டை பகுதிகளில் உள்ள துரித உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், காலாவதியான 2 கிலோ உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!