News May 11, 2024
மாணவ மாணவிகளுக்கு பாராட்டு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஜானகி அண்ணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆலத்தம்பாடி பள்ளியில் சர்மிளாதேவி 500 மதிப்பெண்களும் 436 எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். வினித் 432 இரண்டாம் இடமும் மூன்றாமிடம் ரபீனா 426 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று மதிப்பெண் பிடித்து சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வாழ்த்துக்கள் கூறினர்.
Similar News
News September 6, 2025
சட்டவிரோதமாக மது விற்ற 14 பேர் கைது

மீலாது நபியையொட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மது விற்பனை செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், சட்டவிரோதமாக நேற்றைய தினம் மது விற்பனையில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டு, 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 675 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
News September 6, 2025
வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி

மன்னார்குடி அடுத்த பரவாக்கோட்டை சேர்ந்த நவீன் சிங்கப்பூர் செல்வதற்காக சித்தி விநாயகர் என்பவரிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். நவீனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்காமல் சித்தி விநாயகம் தலைமறைவானார் இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து பெங்களூரு வந்த சித்தி விநாயகத்தை பரவாக்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
News September 6, 2025
திருவாரூர்: பட்டாவில் திருத்தமா? இனி ரொம்ப ஈஸி!

திருவாரூர் மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு, பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் eservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த இணையத்தில் உங்கள் நிலம் தொடர்பான விவரங்களை அறியலாம். மேலும் பட்டாவில் திருத்தம், பெயர் மாற்றம், நீக்கம் போன்ற சேவைகளுக்கு இதன் மூலமாக விண்ணப்பிக்கலாம். சந்தேகங்களுக்கு உங்கள் மாவட்ட அதிகாரியை 04366-223100 அணுகலாம். SHARE பண்ணுங்க!