News April 21, 2025

மாணவிக்கு கருக்கலைப்பு: பேராசிரியர் கைது

image

வண்டலூர் அருகே இயங்கி வரும் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகழக மாணவியை கர்ப்பமாக்கி, கருக்கலைப்பு செய்த உதவிய பேராசிரியர் ராஜேஷ்குமாரை (45) போலீசார் கைது செய்தனர். இவருக்கு கடந்த மாதம்தான் திருமணம் நடைபெற்றது. கருக்கலைப்பின்போது மாணவிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News September 16, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்-16) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 16, 2025

செங்கல்பட்டு: பாமக முன்னாள் நிர்வாகி படுகொலை

image

செங்கல்பட்டு அருகே, இளந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவரும், பாமக முன்னாள் ஒன்றியச் செயலாளரும், அன்புமணி ஆதரவாளருமான வாசு என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனங்களுக்குக் கேட்டரிங் மற்றும் குடிநீர் விநியோகம் செய்து வந்த இவர், லாரியில் தண்ணீர் எடுக்கச் சென்றபோது, வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் போட்டிக்காரணமாக கொலை நடைபெற்றதா என, காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 16, 2025

செங்கல்பட்டு: சைபர் கிரைம் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

மொபைல் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த டிஜிட்டல் காலத்தில் லிங்க் அனுப்பி பணம் திருடுதல், வங்கி ஊழியர் போல் பேசி திருடுதல், தனிப்பட்ட தகவல்கள் திருட்டு போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து புகாரளிக்க சைபர் கிரைம் ADGP-044-29580300, மாநில கட்டுப்பாட்டு அறை-044-29580200, TOLL FREE NO-1930ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். நண்பர்களுக்கும் பகிருங்கள் கண்டிப்பாக உதவும்.

error: Content is protected !!