News January 27, 2025
மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

சிவகங்கை பழையூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆதித்யா (20). கல்லூரி மாணவரான இவா், கல்லூரியில் படிக்கும் 17 வயது மாணவியை காதலித்தாா். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதில் அந்த மாணவி கா்ப்பமானாா். இதுகுறித்து மானாமதுரை மகளிா் காவல் நிலைய போலீஸாா் ஆதித்யா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
சிவகங்கையில் 25ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

சிவகங்கை மாவட்ட வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற 25.04.2025 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
சிவகங்கை: வேலைவாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுலகத்தில் வருகின்ற 25ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வேலை வழங்கும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேலை நாடுவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
சிவகங்கை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலங்கள் – 2

▶️தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில்
▶️மடப்புரம் காளி கோயில்
▶️பிள்ளையார்பட்டி குபேரன் கோயில்
▶️திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில்
▶️சொக்கநாதபுரம் ப்ரித்யங்கரா தேவி ஆலயம்
▶️மருது பாண்டியர்கள் நினைவு இடம்
▶️கொள்ளங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயில்
▶️பிரான்மலை
*நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க. <<16146331>> பாகம் – 1 <<>>
(உங்களுக்கு தெரிந்த சுற்றுலா தளங்களை நீங்கள் கூறலாம்)