News January 14, 2025
மாணவர்கள் பட்டதாரிகளுக்கு ஆட்சியர் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 10-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் முதுகலை பட்டதாரி பழங்குடியின இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு நிகழ்வு, வரும் 19ஆம் தேதி இராசிபுரம் முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப்பள்ளியில் ‘Skill Training’ காலை 9.00 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 11, 2025
நாமக்கல்லில் ரூ.80,500 சம்பளத்தில் வேலை!

நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தில் உள்ள 9 கால்நடை மருத்துவர் ஆலோசகர் (11 மாத ஒப்பந்த அடிப்படையில்) பணிக்கான நேர்முகத் தேர்வு மோகனூர் சாலையில் உள்ள கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் நவ.17 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் B.V.Sc & AH with Computer Knowledge உள்ள 50 வயதிற்குட்பட்டவர் பங்கேற்கலாம். இப்பணிக்கான சம்பளம் ரூ.80,500 ஆகும்.
News November 11, 2025
நாமக்கல்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

நாமக்கல்லில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 (ம) 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற https://scholarships.gov.in/ என்ற வலைத்தளத்தில் நவ.15ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை ( நவம்பர். 12) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


