News September 14, 2024

மாணவர்களை “பூஸ்ட்” செய்த ஆட்சியர்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.

Similar News

News October 30, 2025

திருச்சி: ஆதார் – பான் கார்டு இருக்கா? இது கட்டாயம்

image

திருச்சி மக்களே, மத்திய அரசு பான் கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <>இங்கே க்ளிக் செய்து<<>> “Link Aadhaar” தேர்வு செய்யவும்.
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும்.
அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News October 30, 2025

திருச்சி: என்ஐடியில் இலவச சோலார் பயிற்சி முகாம்

image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வரும் நவ.11 முதல் 19 ஆம் தேதி வரை 9 நாட்கள் இலவச சோலார் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், சூரிய தொழில்நுட்பம் மற்றும் தொழில் பற்றிய நடைமுறை அறிவு, பசுமை ஆற்றல் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 9789766155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 30, 2025

திருச்சி: திருமணமான 3 மாதத்தில் தற்கொலை

image

சோமரசம்பேட்டை அடுத்த தாயனூர் கீழக்காடு பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (25), நாச்சிகுறிச்சியைச் சேர்ந்த ஹரிணி ஆகியோருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டு, ஹரிணி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!