News September 10, 2024

மாணவர்களே, மாதம் 1500 வேண்டுமா? இத படிங்க…

image

அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் அக்.19ம் தேதி தமிழ் மொழி இலக்கிய திறனறிவு தேர்வு நடைபெற உள்ளது. இதில் அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தேர்ச்சி பெறும் 1500 பேருக்கு கல்வித்துறை சார்பில் 2 ஆண்டுக்கு ரூ.1,500 வழங்கப்படும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். நெல்லை மாவட்ட பிளஸ் 1 மாணவர்கள் இந்த வாய்ப்பை விட்டுவிட வேண்டாம்.

Similar News

News November 15, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு: 9.30 மணிக்கு மேல் அனுமதி கிடையாது

image

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நெல்லை மாவட்டத்தில் 15 மற்றும் 16ஆம் தேதி ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெறுகின்றன தேர்வு காலை 9.30 மணிக்கு மேலாக தேர்வு மையங்களுக்கு வர வேண்டும். அதன் பின்னர் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் தேர்வு பனியில் சுமார் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News November 14, 2025

ஆசிரியர் தகுதி தேர்வு 11,640 பேர் எழுதுகின்றனர்

image

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக வருகின்ற சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடைபெற உள்ளது. அதில் முதல் தாள் 11 தேர்வு மையங்களிலும் இரண்டாம் தாள் 35 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தமாக 11,640 பேர் இந்த தேர்வை எழுத உள்ளனர். இந்த தேர்வுப் பணியில் 1300 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

JUST IN கவின் கொலை வழக்கு; ஒருவருக்கு பிடிவாரண்ட்

image

திருநெல்வேலி நீதிமன்றத்தில் இன்று கவின் கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. சுர்ஜித்தின் தாயான உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரி அவரது கணவர் சரவணன் மகன் சுர்ஜித் உறவினர் ஜெயபாலன் ஆகிய நான்கு பேர் மீது நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. கிருஷ்ணகுமாரியின் பெயர் குற்றப்பத்திரிக்கையில் இடம் பெற்றதை தொடர்ந்து திருநெல்வேலி நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!