News June 10, 2024

மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு

image

பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமீன் பல்லாவரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள துவக்கப்பள்ளியில் இன்று பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ மாணவியருக்கு மண்டல தலைவர் இ. ஜோசப் அண்ணாதுரை மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி மேளதாளங்களுடன் வரவேற்றார். அதனை தொடர்ந்து மாணவ மாணவியருக்கு சீருடை புத்தகங்கள் வழங்கினார்.

Similar News

News September 27, 2025

செங்கல்பட்டு: B.E படித்தவர்களுக்கு அற்புத வாய்ப்பு

image

மத்திய அரசு நிறுவனமான (BEL) நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>LINK-ஐ கிளிக்<<>> செய்து, வரும் அக்.07-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். B.E முடித்துவிட்டு வேலை தேடும் FRESHER-களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News September 27, 2025

தாம்பரம்: கோவிலை கைப்பற்றிய அறநிலையத்துறை

image

தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை கிராமத்தில், நித்ய கல்யாண பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலை நிர்வகிப்பதில், இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இக்கோவிலை கையகப்படுத்த, இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து
அறநிலையத் துறை அதிகாரிகள் நேற்று இக்கோவிலை கையகப்படுத்தினர்.

News September 27, 2025

செங்கல்பட்டு: முக்கிய உத்தரவு, விவசாயிகளுக்கு நற்செய்தி

image

செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்தில், 35,068 ஏக்கருக்கு நெல் நடவு செய்யப்பட்டது. தற்போது, ஒரு சில இடங்களில் அறுவடை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், சொர்ணவாரி பருவத்திற்கு கூடுதலாக ஆறு இடங்களில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.மத்திய அரசின் நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், சொர்ணவாரி பருவத்தில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

error: Content is protected !!