News April 3, 2025
மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: இருவர் கைது

சமயபுரத்தில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி விடுதியில் தஞ்சாவூரை சேர்ந்த குழந்தைநாதன் விடுதி வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இவரது நண்பரான அரியலூரைச் சேர்ந்த சுந்தர்ராஜன் விடுதியில் உள்ள மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த லால்குடி அனைத்து மகளிர் போலீசார் விடுதி வார்டனையும், அவரது நண்பரையும் இன்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
Similar News
News December 17, 2025
திருச்சி மாவட்டத்தில் நாளை பவர் கட்!

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்பட உள்ளது. இதனால் மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, கங்கைகாவேரி, அய்யம்பாளையம், மாதவன் சாலை, கவி பாரதி நகர், தேவராய நகர், ஓலையூர், மாம்பழச்சாலை, உத்தமர்சீலி, சென்னை பைபாஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
News December 17, 2025
திருச்சி: சிறுமி பாலியல் வன்கொடுமை – கோர்ட் அதிரடி

மணப்பாறை அருகே ஒரு கிராமத்தில், கடந்த 2021-ம் ஆண்டு மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை, சுரேஷ் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அப்போது சிறுமி கத்தி கூச்சலிடவே, அவரது தலையில் கல்லால் அடித்துவிட்டு தப்பி ஓடிய சுரேஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் குற்றவாளி சுரேஷுக்கு நேற்று 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
News December 17, 2025
திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

முசிறி உழவர் சந்தை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்கு உரிய வகையில் நின்று கொண்டிருந்த ராஜா (42), சுரேஷ் (42), சுப்ரமணி (48) ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முசிறியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார், நகைகளை மீட்டனர்.


