News April 3, 2025
மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி துவக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் “என் கல்லூரி கனவு” எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் வரும் 06.04.2025 அன்று காலை 09 மணியளவில் சிவகங்கை அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 19, 2025
மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

சிவகங்கை மன்னர் துரை சிங்கம் கல்லூரியில் ஆக.20ஆம் தேதி காலை 10 மணிக்கு மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தமிழ் மரபும் பண்பாடும் பரப்புரையாக “சிம்புட் பறவையே… சிறகை விரி!” என்ற தலைப்பில் எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை வழங்க உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
News August 19, 2025
உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற உள்ள இடங்கள்

சிவகங்கை மாவட்டம், “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் ஆகஸ்ட்-20, நாளை நடைபெறவுள்ள இடங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்காங்கே அறிவிக்கப்பட்ட முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு, நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரிகளிடம் தங்கள் மனுக்களை கொடுத்து பதிவு செய்யுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கா. பொற்கொடி அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
News August 19, 2025
சிவகங்கை: தேர்வு கிடையாது! ரயில்வே துறையில் வேலை APPLY

சிவகங்கை இளைஞர்களே, மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th (அ) ITI முடித்தவர்கள் செப்.11க்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 15 முதல் 25 ஆண்டுகள். மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். https://rrccr.com/ என்ற தளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய <