News January 10, 2025
மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சு போட்டி- கலெக்டர்

நெல்லை பழைய பேட்டையில் உள்ள ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜனவரி 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இந்த போட்டியில் பங்கேற்குமாறு கலெக்டர் கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
நெல்லை வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

நெல்லை மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் நெல்லை வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000476, 9445000478, 9445000477 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..
News August 21, 2025
அஞ்சல் அயல் முகவர் திட்டத்திற்கு விண்ணப்பிக்க அழைப்பு

நெல்லை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுசிலா தெரிவித்ததாவது: அஞ்சல் சேவைகளை விரிவுபடுத்த அஞ்சல் அயல் முகவர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியான தனிநபர், நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். அஞ்சலகங்கள் இல்லாத இடங்களில் சேவைகளை மேம்படுத்த இத்திட்டம் உதவும். விண்ணப்பங்களை 27ம் தேதிக்குள் பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் சமர்ப்பிக்கலாம். விவரங்களை அஞ்சல் கோட்ட அலுவலகத்தில் பெறலாம்.
News August 21, 2025
நெல்லையில் இன்று முதல் ஆர்ப்பாட்டத்திற்கு தடை

நெல்லை தச்சநல்லூரில் நாளை (வெள்ளிக்கிழமை) பா.ஜனதா பூத் கமிட்டி மாநாடு நடைபெறுகிறது. இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் நெல்லை மாநகரில் போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹடிமணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை நெல்லையில் போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டங் கள் நடத்த அனுமதி இல்லை என தெரிவித்துள்ளார் .