News March 13, 2025

மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

image

குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூர் பகுதியில் உள்ள பாலாற்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (24) நேற்று (மார்ச்.12) மாட்டு வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது வண்டியின் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் குடியாத்தம் கிராமிய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 23, 2025

வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News August 22, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி 26.08.2025 முதல் 12.09.2025 வரை காட்பாடியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

News August 22, 2025

வேலூர்: வீட்டு ஓனரின் அநியாயத்துக்கு Full Stop!

image

வேலூர் மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!