News February 23, 2026
மாட்டுத்தாவணி: பிரியாணி கடையில் தூக்கிட்டு தற்கொலை

நேபாளம், ஜனக்பூரை சேர்ந்தவர் நாகேந்திர சஹானி மகன் சுதிர் சஹானி(21). இவர் மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்தார். இவர் மதுரை பெண் ஒருவரை காதலித்ததை அறிந்த சஹானியின் பெற்றோர் அதனை கண்டித்தனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று தான் வேலை பாத்த பிரியாணி கடையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோ.புதூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 26, 2026
மதுரை : குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 நிதியுதவி

மத்திய அரசின் ‘மிஷன் வத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஆதரவற்ற (or) மாற்றுத்திறனாளிகள் உள்ள ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு, மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெற, வருமானச் சான்றிதழ் மட்டுமே போதுமானது. நீங்கள் இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாகவோ விண்ணப்பிக்கலாம்.
News February 26, 2026
மதுரை: டிஜிட்டல் மயத்தில் இனி எல்லாம் சுலபம்

மதுரை மக்களே, பான்கார்டு, வாக்காளர் அட்டை, லைசன்ஸ், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYயாக விண்ணபிக்கலாம்.
1.பான்கார்டு: <
2.வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in
3.ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/
4.பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink
இந்த இணையதளங்களுக்கு சென்று விண்ணப்பியுங்க.. SHARE பண்ணுங்க!
News February 26, 2026
மதுரை: அசர வைக்கும் நகை கடை வியாபாரியின் காணிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்க்கு ரூ.90 லட்சம் மதிப்பில் தங்க திருவாட்சி உபயமாக வழங்கப்பட்டது. மதுரையை சேர்ந்த நகைக்கடை வியாபாரி ஒருவர் தனது வேண்டுதல் நிறைவேறியதை தொடர்ந்து தங்கத்தில் திருவாட்சி செய்து கோவில் அதிகாரி மூலம் வழங்கினார். கடந்த ஞாயிறு சிறப்பு பூஜை நடத்தி, மீனாட்சி அம்மன் சன்னதியின் கருவறையில் புதிய திருவாட்சி அமைக்கப்பட்டது.


