News March 19, 2024
மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி

திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் போக்சோ வழக்கில் இன்று (மார்ச் 19) விசாரணைக்கு ஆஜரான ஷாஜகான் என்பவர் நீதிமன்ற மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். படுகாயமடைந்த ஷாஜகான் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 9, 2025
திண்டுக்கல்: கனரா வங்கியில் பயிற்சி.. மாதம் ரூ.22,000!

திண்டுக்கல் மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News September 9, 2025
திண்டுக்கல்: தவெக விஜய் வருகிறார்!

தமிழக சட்டமன்ற தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய் வரும் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை தமிழகத்தில் பிரச்சாரம் செய்கிறார். இதில், வரும் டிச.20ஆம் தேதி திண்டுக்கல்லுக்கு வருகை தந்து பிரச்சாரம் செய்ய உள்ளார்.
News September 9, 2025
திண்டுக்கல்: வியாபாரியை ஏமாற்றிய மோசடிப் பெண்

திண்டுக்கல்: கோபால் சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மக்காச்சோளம் வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் தான் ஏற்றுமதியாளர் என அறிமுகமான சேலத்தை சேர்ந்த சங்கீதா(38) பணத்தை தனக்கு அனுப்பி வைத்தால் விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் பணம் அனுப்புகிறேன் எனக்கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு மக்காச்சோளத்தை அனுப்பாமல் ஏமாற்றிய நிலையில், ராஜ்குமார் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.