News January 29, 2026
மாஞ்சோலை தொழிலாளர்கள் 7 நாள்களில் காலி செய்ய உத்தரவு

மாஞ்சோலை தேயிலை தோட்ட குடியிருப்புகளை 7 நாள்களுக்குள் காலி செய்ய தோட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாம்பே-பர்மா டிரேடிங் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைவதால், அங்கிருந்து தொழிலாளர்களை வெளியேறுமாறு அந்நிறுவனம் கூறியது. இதற்காக நடைபெற்ற போராட்டங்கள் தோல்வியில் முடிந்த நிலையில், மக்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற தொடங்கினர். இந்நிலையில் முழுவதுமாக காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
Similar News
News February 3, 2026
சென்சார் போர்டு தேவையே இல்லை: சுமன்

சென்சார் போர்டு இருப்பதே இப்போது தேவையில்லாதது என நடிகர் சுமன் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் சினிமாவை மட்டும் தான் பார்த்தார்கள் என்ற அவர், ஆனால் இன்று செல்போனிலேயே எல்லாவற்றையும் பார்க்கின்றனர் எனவும், ஆபாசமும் வன்முறையும் அதிகம் உள்ள வெப்சீரிஸுக்கு சென்சாரே இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், மொபைல், ஓடிடி என அனைத்துக்கும் சென்சார் வேண்டும். இல்லையென்றால் அது தேவையே இல்லை எனவும் கூறியுள்ளார்.
News February 3, 2026
பனிமூட்டம்.. இந்த 7 மாவட்ட மக்களே உஷார்

தமிழகத்தில் பனியின் தாக்கம் மேலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என IMD அலர்ட் கொடுத்துள்ளது. இதனால், அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வெளியே செல்வதை முடிந்தளவு தவிருங்கள். உங்கள் ஊரில் பனியின் தாக்கம் உள்ளதா நண்பர்களே?
News February 3, 2026
பொதுத்தொகுதியில் களமிறங்கும் ஜான் பாண்டியன்?

தமமுக தலைவர் ஜான் பாண்டியன், வரும் தேர்தலில் பொதுத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் எழும்பூர் (தனி), 2024-ல் தென்காசி (தனி) தொகுதியில் போட்டியிட்டார். தற்போது NDA கூட்டணியிலுள்ள அவர், தென்காசி, வாசுதேவநல்லூர், ஸ்ரீவில்லிபுத்தூர், கடையநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளை கேட்டுள்ளதாகவும், இதில் ஒரு பொதுத்தொகுதியில் அவர் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


