News June 11, 2024
மாஞ்சோலையை அரசே எடுத்து நடத்த சபாநாயகரிடம் மனு

தமிழகத்தில் ஊட்டி, ஏலகிரியில் உள்ள தேயிலை தோட்டத்தை அரசே எடுத்து நடத்துவதுபோல மாஞ்சோலை பகுதியையும் அரசே எடுத்து நடத்தி எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என மாஞ்சோலை பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று சபாநாயகர் அப்பாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர் தமிழக அரசிடம் பேசுவதாக உறுதியளித்தார்.
Similar News
News September 14, 2025
ஜிஎஸ்டி வரி சீரமைப்பு கருத்தரங்கில் நயினார்

ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்திய ‘வளர்ந்து வரும் பாரதத்திற்கான ஜிஎஸ்டி வரி சீரமைப்பு’ எனும் கருத்தரங்கு இன்று (செப்டம்பர் 14) சென்னையில் நடந்தது. இதில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ பங்கேற்றார். பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
News September 14, 2025
நெல்லை மக்களே எச்சரிக்கை

தற்போது வாட்ஸ்அப்பில் RTO Traffic Challan.apk அல்லது SBI Aadhar Update.apk என்று தெரிந்த அல்லது தெரியாத நம்பரிலிருந்து பதிவிறக்கம் செய்வதற்கான apk file வந்தால் உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். அதை பதிவிறக்கம் செய்தால் உங்கள் புகைப்படங்கள், வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதுபோன்ற குற்றங்களில் சிக்கிக் கொண்டால் 1930 என்ற சைபர் குற்றப்பிரிவு எண்ணை அழைக்கலாம்.
News September 14, 2025
அடிக்கடி கவிழும் அரசு பஸ்கள்: தொழிலாளர்கள் கோரிக்கை

நெல்லையில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டு அரசு பஸ்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவ்வப்போது விபத்தில், சிக்குவது பிரேக் டவுன் ஆவது போன்ற நிகழ்வுகளும் அதிகரித்துள்ளது. இதனை தவிர்க்க பஸ்களின் எண்ணிக்கை அடிப்படையில் போதிய ஓட்டுனர், நடத்துனர்கள் நியமிக்க வேண்டும், பிஎஸ் 6 தொழில்நுட்ப பஸ்களை பராமரிப்பு செய்வதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை பணிகளில் நியமிக்க வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.