News November 19, 2024

மாஞ்சா நூலில் காற்றாடி விவகாராத்தில் 8 பேர் கைது

image

வியாசர்பாடி மேம்பாலத்தில் தந்தையுடன் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்து, இரண்டரை வயது குழந்தையின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மாஞ்சா நூலில் காற்றாடி பறக்கவிட்ட 8 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இந்நிலையில், தனது குழந்தை தற்போது நலமாக உள்ளதாக தெரிவித்த தந்தை பாலமுருகன், “இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க போலீசார் நடவடிக்கை வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News September 9, 2025

சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

image

சென்னையில் இன்று (09.09.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.

News September 9, 2025

சென்னையில் இடியுடன் மழை வெளுக்கும்

image

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசும் இருக்க கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மழை வருமா? கமெண்ட்ல சொல்லுங்க.

News September 9, 2025

விஜயகாந்தின் சகோதரி காலமானார்!

image

தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின், சகோதரி மருத்துவர் விஜயலட்சுமி (78). இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்.09) காலமானார். அவரது இறுதி சடங்கு மதுரை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் நாளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு விஜயகாந்த் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!